expr:class='"loading" + data:blog.mobileClass'>

Sunday 13 September 2015

அன்பார்ந்த தோழர்களே தோழியர்களே,
                                                                                    வணக்கம் நமது தமிழ் மாநில சங்கத்தின்  37 வது தமிழ் மாநில மாநாடு 04.09.2015 முதல் 07.09.2015 வரை புதுக்கோட்டை நகரில் சிறப்பாக நடைபெற்றது . நமது கோட்ட சங்கத்தின் சார்பாக கோட்ட செயலர் தோழர் S .வீரன், கோட்ட தலைவர் தோழர் A . கதீர் அகமது ,கோட்ட உதவி தலைவர்கள் தோழர் G  பத்மநாபன், தோழர் N . பொற்கை பாண்டியன், கோட்ட உதவி செயலர் தோழர் R . இளந்திரை யன்  கோட்ட அமைப்பு செயலர் M. ராஜேந்திரன் மகிளா கமிட்டி தலைவர் தோழியர் K . மாலதி, தோழர்கள் R சரவணன், P குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
                        மாநாட்டை நமது அஞ்சல் மூன்று பொது செயலரும் NFPE சம்மேளனத்தின் மாபொது செயலருமான தோழர் R .N .பராஷர் துவக்கி வைத்தார்.
                       மாநாட்டில் நமது முன்னாள் பொது செயலர் அறிவு ஜீவி தோழர் KVS, முன்னாள் மா பொது செயலர் தோழர் K .R முன்னாள்  பொது செயலர் தோழர் N .S, சமமேளன செயல் தலைவர் தோழர் A மனோகரன், உதவி மாபொது செயலர் தோழர். ரகுபதி மற்றும் முன்னாள் மாநில அகில இந்திய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்  
                        மாநாடு சிறப்பாக நடைபெற அணைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்த புதுக்கோட்டை தோழர்களை நமது கோட்ட சங்கம் வாழ்த்துகிறது.
                        மாநாட்டில் நடைபெற்ற  பொருளாய்வுகுழு கூட்டத்தில் 64 க்கும் மேற்பட்ட சார்பாளர்கள் பங்கேற்று  தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.
                        மாநாட்டில் நமது மதிப்பிற்குரிய Chief PMG  திரு . சார்லஸ் லோபோ   அவர்களும், PMG CENTRAL REGION திரு.J .T வெங்கடேஸ்வர்லு அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
                         7 வது ஊதியக்குழு, CBS, CIS, FSI, TASK FORCE COMMITTEE பரிந்துரைகள் உட்பட அனைத்து அஞ்சல் ஊழியர்கள் பிரச்சனைகள் மீதும் விவாதம் நடத்தப்பட்டது.  
                         அஞ்சல் ஊழியர்கள் பிரச்சனைகள் மீதும் கோட்ட மற்றும் கிளை மட்ட அளவிலான பிரச்சனைகள் மீதும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

                        பின்னர் நடைபெற்ற புதிய நிர்வாகிகள் தேர்தலில்

                               தலைவராக தோழர் P .மோகன் 
                               செயலராக   தோழர் J .R 
                         நிதி செயலராக தோழர் A .வீரமணி

ஆகியோர் உட்பட மாநில சங்க நிர்வாகிகள் தேர்ந்தடுக்கபட்டனர்.

                      நமது கோட்ட செயலர் தோழர் S .வீரன், உதவி மாநில செயலராக தேர்ந்தடுக்கபட்டார்.

No comments:

Post a Comment